திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் 12, 13,15 ஆவது வார்டுகளில் கழிவுநீர் வாயக்கால் அமைக்கும் பணி, சாலைவசதி மற்றும் குடிதண்ணீர் மோட்டார் சரிசெய்யும் பணிகள் நடந்துவருகிறது. இதனை பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், கவுன்சிலர்கள் விஜயவீரன்,வைதேகி குமராண்டி உள்ளிட்ட பலர் ஆய்வின்போது உடனிருந்தனர்.