சென்னை, ஏப். 12- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள திருமை யிலாடி மற்றும் முதலை மேடு ஆகிய கிராமங்களில் ரூ. 16 கோடி செலவில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப் படும் என்று சட்டப்பேரவையில் வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.12) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது அப்போது புதிய அறிவிப்பு களை வெளியிட்டு அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகை யில், பேரிடர் முன்னறிவிப்பு பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண் காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய ‘டிஎன் அலாட்’ என்ற செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட ‘ டிஎன் ஸ்மார்ட்’ செயலி ரூபாய் 12 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றார். வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கொள்ளி டம் ஆற்றின் கரையை ரூபாய் 14.5 கோடி செலவில் பலப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் புதிதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ சேவைகள் குறித்து தகவல்களை அளிக்கும் வகையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டங்க ளில் உள்ள 23 கிராமங்களில் மனை வாடகை விதிக்குட்பட்டு பட்டா வழங்கப் படாமல் உள்ள பகுதிகளுக்கு மக்களுக்கு ரயத்வாரி மனைப் பட்டா வழங்கப்படும். வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவில் முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டு இணைய வழியிலான சேவைகள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப் பாண்டில் நலிந்தோர் நிவாரண உதவித் திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் திட்டம் ஆகிய திட்டங்களும் கணினி மயமாக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் இணைய வழியாக விண்ணப்பித்து இந்த திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நிதி உதவி களை நேரடியாக பெற்றுக் கொள்ள முடி யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.