districts

img

மழலையர் பள்ளி ஆண்டு விழா

திருவில்லிபுத்தூர்,ஏப்.4-  திருவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார்குளம் சத்திய வித்யாலயா (சிபிஎஸ்இ)  மேல்நிலைப்பள்ளியில் மழலை யர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி குழும தலை வர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவி கவி யாழினி வரவேற்றார்.   ராஜபாளையம் நகரமன்ற தலைவர் பவித்ரா   மழலை யர்களுக்கு பட்டங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள், சான்றிதழ்க ளை வழங்கினார். பாலர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது  ஆசிரியைகள் இந்திரா ரவீந்திரன், கற்பக மாரி உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.