கண்ணூர், ஜுன் 5- கேரளாவை கரியமில வாயு (கார்பன்) சமநிலை கொண்ட மாநில மாக மாற்றுவதே நோக்கம் எனவும், பருவநிலை மாற்றம் உலகிற்கு அச்சு றுத்தலாக உள்ளது எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பினராயியில் மாநில அரசின் மரம் நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தின் கசப்பான விளைவுகளை கேரளாவும் சந்தித்துள் ளது. கழிவுகளை அகற்ற நிரந்தரத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வன மக்களை கவலையில் ஆழ்த்தியுள் ளது. வனப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை சூழலியல் பாதிப்புள்ள பகுதிகளாக மாற்றக் கூடாது என்பதே கேரளாவின் நிலைப்பாடு. காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதை கேரள அரசு முழுமை யாக ஏற்கிறது. மேலும் வளர வேண்டும், அதன் ஒரு பகுதியாக, பெரிய அளவில் மரங்கள் நடப்பட வேண்டும். இதெல் லாம் மாநிலத்தில் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அடர்த்தியான மாநிலம் கேர ளம். வனப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் வசிக்கும் இடத்தை சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியாக மாற்றுவதில் உள்ள சிரமம் குறித்து ஏற்க னவே ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற உத்தரவு வந்தது. குடியேற்ற பகுதிகளில் வாழும் மக்க ளின் நலன்களையும் பாதுகாப்பதே அர சாங்கத்தின் கொள்கை. ஒன்றிய அரசு டன் தொடர்ந்து இது வலியுறுத்தப் படும். அனைத்து விசயங்களிலும் மக்க ளுடன் நிற்கும் அணுகுமுறையையே கேரள அரசு எடுக்கும். வனத்தை பாது காப்பதிலும், மேம்படுத்துவதிலும் எந்த சமரசமும் இல்லை. இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.