நாகர்கோவில், ஏப்.24- கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், கண்ண னூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆகியோர் தலை மையில் ஞாயிறன்று (ஏப்.24) நடை பெற்றது. கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவா திக்கப்பட்டது. ஊராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விப ரங்கள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்தல் குறித்தும், மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்குவதிலுள்ள இடர்பாடுகள், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுப் பணியை கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி இணைய வழி வழங்குதல் குறித்தும், ஊரக பகுதிகளில் தொழில் தொடங்கு வதற்கு ஏதுவாக வழிமுறைகளை எளி மைப்படுத்துதல் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் கோரிக்கை களுக்கு தீர்வு காண யாரை அணுகுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, அமைச்சர் மற்றும் ஆட்சி யர் தலைமையில் “நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள்”குறித்து அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பேச்சி யம்மாள், இணை இயக்குநர் (வேளா ண்மை) சத்திய ஜோஸ், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எம்.விஜ யன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், திருவட்டார் வட்டாட்சியர் தினேஷ், கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலா பாய், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.