புதுதில்லி,டிச.24- மீனவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே. நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை முன்வைத்தார்.மக்க ளவையில் கே.நவாஸ்கனி எம்.பி.,பேசியதாவது: இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கக்கூடிய சத்தீஸ்கரில் மகாரா சமூகத்தினரை மலைவாழ் பட்டியலில் சேர்ப்பது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவை வரவேற்கிறேன். இந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியால் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய சமூகத்திலே புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் குருவிக் காரர் சமூகத்தை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்த்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஒன்றிய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். தமிழகத்தில் பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக தங்களையும் மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒன்றிய அரசு விரைவில் அவர்களை அந்த பட்டியலில் இணைக்க பரிசீலிக்க வேண்டும். நாடு முழுவதும் சமூக, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலை யிலே இருக்கும் சில பிரிவினர் தங்களையும் இந்த பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு தான் அவர்களை சேர்க்க முடியும் என்பது துரதிர்ஷ்டவச மானது. புதிதாக ஒரு பிரிவினர் சமூக கல்வி பொருளா தார வேலை வாய்ப்பில் பின் தங்குவது கிடையாது. மாநிலங்கள் முன்வைக்கும், நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து சமூகப் பொருளாதார வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி இருக்கும் இன் னும் பல பிரிவினர்களையும் இந்த பட்டியலின வகுப் பில் இணைக்க அரசு துரித நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
எங்களுடைய பகுதிகளில் உள்ள மீனவ சமுதாயத்தினர் பலர் தங்களையும் பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடலை மட்டுமே நம்பி வாழக்கூடிய மீனவர் சமு தாயத்தினர், இன்னமும் சமூக பொருளாதார கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. அவர்களையும் முன்னேற்றும் வகை யில் அவர்களுக்கான உரிமைகள் இட ஒதுக்கீடு களை பெறும் வகையில் பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும் . தமிழகத்தில் மலை வாழ் பட்டியலில் சேர்க்க சொல்லக் கூடிய பல பிரி வினர் பல சமூகத்தினர் பிற மாநிலங்களில் மலைவாழ் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பட்டியல் வகுப்பில் இணைக்கப்படும் மக்கள் அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் ,அரசு வழங்கும் இட ஒதுக்கீடு மூலம் பெறக்கூடிய நன்மை கள் என அனைத்தையும் முறையாக பெறுகின்றார் களா என்பதனை ஆய்வு செய்யும் வண்ணம் குழுக்களை அமைத்து முறையாக கண்காணிக்க வேண்டும். எனது இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்காக ஏகலைவா பள்ளியை அமைத்துத்தர வேண்டும். அவர்களுக்கு பிரத்யேக மாக திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களையும் அமைத்துத்தர வேண்டும்.