திண்டுக்கல், மே.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி நகர் மற்றும் ஒன்றியக்குழு அலு வலகங்களின் திறப்பு விழா மே 29 ஞாயிறன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அலுவ லகங்களை திறந்து வைத்தார். பழனி படிப்பாறை காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அலுவ லகத்தின் திறப்பு விழாவிற்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். நகரச்செயலாளரும், பழனி நகர்மன்றத் துணைதலைவருமான கே.கந்தசாமி வரவேற்றார். தோழர் ஆர்.ராமராஜ் நினைவரங் கத்தை மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். தோழர் வி.ஏ.கருப்புசாமி நினைவரங்கத்தை மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கமும், தோழர் பி.சுப்ரமணியம் நினைவு கொடிக்கம் பத்தில் கொடியேற்றி மாநிலச்செயற் குழு உறுப்பினரும் முன்னாள் திண்டுக் கல் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலபாரதியும், முன்னாள் எம்எல்ஏ என். பழனிவேல் நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றி மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜும், தோழர் கே.தங்கவேல் நினைவு நூலகத்தை மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளருமான என்.பாண்டி ஆகியோர் திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.அருள்செல்வன், முன் னாள் பழனி நகர்மன்ற தலைவரும், மாவட்டச்செயற்குழு உறுப்பினரு மான வி.இராஜமாணிக்கமும், கட்சி யின் மூத்த தலைவர்கள் பி.கே.கருப்பு சாமி, எம்.கருணாகரன், எம்.குருசாமி, உ.களஞ்சியம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச்செயற்குழு உறுப்பி னர்கள் கே.ஆர்.கணேசன், பி.செல்வ ராஜ், பி.வசந்தாமணி, கே.பிரபாகரன், ஜி.ராணி, டி.முத்துச்சாமி, எம்.ராமசாமி, தொப்பம்பட்டி ஒன்றியச்செயலாளர் என்.கனகு, ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவமணி ஆகியோர் தலைவர்களின் படங்களை திறந்து வைத்தனர். பழனி ஒன்றியச்செயலாளர் பி.செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சி யில் மாவட்ட, ஒன்றிய, நகர்க்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். (நநி)