பெண் வெட்டி படுகொலை கணவர் - சகோதரர் கைது
தேனி, மே 11- கூடலூர் அருகே இளம் பெண்ணை வெட்டி படு கொலை செய்த வழக்கில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் சகோதரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே கருநாக்கமுத் தன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பிரியா (34). இவரது கணவர் விமல் (40). இவர்களுக்கு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.செல்ல பிரியா வின் கணவர் விமல் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.செல்ல பிரியாவுக்கும் விமலுக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது இந்நிலையில் செல்ல பிரியாவின் கணவர் விமலும், செல்ல பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டியும் (38) ஒன்றாக மது அருந்தி விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து செல்லப்பிரியாவுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் விமல் தூண்டுதலின் பேரில் செல்லப் பாண்டி தனது தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செல்லபிரியா பலி யானார். தகவல் அறிந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர் செல்ல பிரியாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடியில் போலீசார் எனக் கூறி மூதாட்டியிடம் நகை அபகரிப்பு
தேனி, மே 11- தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் 4 ஆவது தெரு வில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் மனைவி வெண்ணிலா (72). இவரது மகன் நவீன்குமார். இதே பகுதி யில் 8 ஆவது தெருவில் வசித்து வருகிறார். மகனை பார்ப்ப தற்காக வெண்ணிலா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் தங்களை போலீசார் எனக்கூறி அறி முகமாகி , மூதாட்டியிடம், நகரில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், பொது வெளியில் இப்படி நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். அணிந்திருக்கும் நகைகளை தருமாறும் அவற்றை காகிதத்தில் பொட்டலமாக மடித்து பாது காப்பாக தருவதாகவும் கூறியுள்ளனர். மூதாட்டியும் அவர்களை நம்பி கழுத்தில் அணிந்திருந்த பனி ரெண்டரை பவுன் தாலி செயின், 2 பவுன் வளையல் ஆகிய நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிய மர்ம நபர்கள் அவற்றை காகிதத்தில் மடிப்பது போல் போக்கு காட்டி விட்டு, ஏற்க னவே தயாராக வைத்திருந்த கற்கள், போலி பித்தளை நகைகளை கொண்ட ஒரு பொட்டலத்தை கொடுத்து விட்டு தப்பிவிட்டனர். வீட்டில் வந்து பொட்டலத்தை பிரித்து பார்த்த மூதாட்டி வெண்ணிலா தான் ஏமாற்றப்பட்ட தையறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பறை இசைக்கருவிகளுடன் பயணித்த மாணவியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநர் இடைநீக்கம்
திருநெல்வேலி, மே 11- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பறை இசைக் கருவிகளுடன் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது நடத்துனர், மாணவியை அவதூறாக பேசி பறை இசைக் கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நெல்லை போக்கு வரத்து கழக மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெல்லை போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கொடைக்கானல் கோடை விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல், மே 11- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா 2023 மற்றும் 60 ஆவது மலர் கண்காட்சி ஆகியவை மே மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத்துறை மூல மாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப் பட உள்ளது. இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய மற் றும் கிராமிய கலை நிகழ்ச்சி கள் விளையாட்டு நிகழ்ச்சி கள் பாரம்பரிய வீர விளை யாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன. கலை நிகழ்ச்சிகள் அனைத் தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப் பாக நடத்தவும் விழா நாட்க ளில் போக்குவரத்து நெரி சல் ஏற்படாத வகையில் அதற்கான வழிமுறைகளை வகுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும் சுற்றுலாப் பயணிகள் சிர மப்படாத வகையில் வசதி கள் ஏற்படுத்துவது குறித்தும் மருத்துவ குழுக்கள் 108 ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை யில் நிறுத்துவது குறித்தும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யாளர் விசாகன் தலைமை யில் சம்பந்தப்பட்ட அலுவ லர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலு வலர் லதா, கொடைக்கா னல் வருவாய் கோட்டாட்சி யர் ராஜா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி கொடைக் கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனி வாசன் கொடைக்கானல் நக ராட்சி தலைவர் செல்லத் துரை நகராட்சி துணைத் தலைவர் மாயக்கண்ணன் ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நக ராட்சி ஆணையாளர் சத்திய நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடல்சார் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு
சென்னை, மே 10- ஒன்றிய அரசின் கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் இவ்வாண் டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறி விப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக் கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர் கடல்சார் பல்கலைக் கழ கம் வழங்கும் பாடத்திட்டங்கள் குறித்த தக வல்களை எடுத்துரைத்தார். தற்பொழுது இந்திய கடல்சார் பல்க லைக்கழகம் சென்னை, கொச்சி, கொல் கத்தா, மும்பை (2) விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஆறு வளாகங்களு டன் செயல்பட்டு வருகிறது. மேலும் 17 கடல்சார் பயிற்சி நிறுவனங்கள் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன என்றார். கப்பலில் பணிபுரிய விரும்பும் மாண வர்களுக்கு இந்திய கடல்சார் பல்கலை கழகம் பி.டெக். (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி. (நாட்டிகல் சயின்ஸ்), மற்றும் டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் (டிஎன்எஸ்) போன்ற இளங்கலை கடல் சார் பாடத்திட்டங்கள் மாலுமி இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி மற்றும் தலைமைப் பொறியாளர் போன்ற முக்கிய பணிகளுக்கு மாணவர்களை தயார் படுத்துகிறது. பிடெக். (லாஜீஸ்டிக்ஸ், ரீடெய்ல் மற்றும் இ-காமர்ஸ்) போன்ற இளங்கலை கடல்சார் அல்லாத பாடத்திட்டங்கள், கப்பல், கட்டிடக்கலைஞர், கப்பல் வடிவ மைப்பாளர், கப்பல் பாரமரிப்பு பொறி யாளர், மற்றும் கடல்சார் தளவாட மேலா ளர் போன்ற பணியிடங்களுக்கும் மாண வர்களுக்கு பாடத்திட்டங்கள் உள்ளன. என்று மாலினி சங்கர் கூறினார், பேட்டியின் போது பதிவாளர் கே.சரவ ணன், பல்கலைக்கழக டீன் மற்றும் சென்னை வளாக இயக்குநர் டாக்டர். ராஜூ பாலாஜி, மற்றும் சென்னை வளாக இயக்கு னர் காமேடோர் கே.டி. ஜோஷி (ஓய்வு) தேர்வுக் கட்டுப்பாட்டாளர்- மற்றும் நிதி அதிகாரி (பொ) எம். சரவணன் ஆகி யோர் உடனிருந்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மதுரை, மே 11- ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் மதுரை திருமங்கலம் வட்டகிளையின் தேர்தல் புதனன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்களாக மதுரை வடக்கு வட்டச்செயலாளர்.பென்னட் மற்றும் பொருளா ளர் கிருஷ்ணன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். இதில் திருமங்கலம் வட்டக்கிளை தலைவராக பிலாவடியான், செயலாளராக.ஜான் இங்கர்சால், பொருளாளராக ஜெய பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெண் கேட்டதால் ஆத்திரம் வாலிபர் கொலை -தாய்மாமன் கைது
ஆண்டிபட்டி, மே 11- ஆண்டிபட்டி அருகே பெண் கேட்ட வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த தாய் மாமனை காவல்துறையினர் கைது செய்தனர் . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு 19 வயதில் மகள் உள்ளார். கருப்பசாமியின் உடன் பிறந்த சகோதரி பேச்சியம்மாள், அவரது மகன் நாகபிரபு(27) மகள் நாகம் மாள் ஆகியோர், கருப்பசாமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர் .அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி நாகம்மாளை தாக்கினார் . தட்டிக்கேட்ட நாகபிரபுவை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் பின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. கருப்பசாமிக்கு தலையின் முன் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் நாகபிரபு மேல் சிகிச் சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற தாசில்தார் தற்கொலை
மதுரை, மே 11- மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவகுமார் (60). துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக அவரது மகன், தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவ குமார் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர் வியாழனன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமாரின் கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் முன் நிறுத்திய 5 இரு சக்கர வாகனங்கள் எரிப்பு
தேனி, மே 11- ஆண்டிபட்டி அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்களை எரித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிராது காரான்பட்டியை சேர்ந்தவர்கள் சூர்யபிரபு, பிரகாஷ், ராஜா. உடன் பிறந்த சகோதரர்களான 3 பேரும் குடும்பத்து டன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சூர்யபிரபு மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் தனியார் வங்கியில் வேலை செய்து வருகின்றனர். ராஜா எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான 5 இருசக்கர வாகனங்களை வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் இவர்கள் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடியோடு எரிந்து நாசமானது. இதுகுறித்து பிரகாஷ் க.விலக்கு காவல்நிலையத்தில் கொடுத்த புகா ரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து
தேனி, மே 11- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கோடைமழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட் களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம், மதுரை கள்ளழகர் கோவில் திரு விழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக் கப்பட்டதால் சரிந்தது. இந்நிலையில் தற் போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி யில் கனமழை பெய்து வருவதால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வியாழனன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள் ளது. நீர் வரத்து 784 கனஅடி.அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.80 அடி, வரத்து 413 கனஅடி, திறப்பு 100 கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.30 அடி, வரத்து 31 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.88 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 3 கன அடி. கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி யில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதி கரித்து காணப்படுகிறது. இதனால் அருவி யில் குளிக்க வனத்துறையினர் தடை விதித் துள்ளனர்.