திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மே 25 புதனன்று ஜமாபந்தி நடைபெற்றது. இதில் சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ் விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்றார். பட்டா மாறுதல் நில பதிவு உட்பட 26 மனுக்கள் பெறப்பட்டன.இதில் தாசில்தார் ராமசுப்ரமணியன், துணை வட்டாட்சியர்கள் தனம் மற்றும் சசிகலா வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் ,தனி தாசில்தார் ராமதாஸ், வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.