நத்தம், மே 20- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யா பட்டியில் உள்ள காளியம்மன், கருப்புசாமி கோவில் திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் திண்டுக் கல்,சிவகங்கை,திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 409 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத 10 காளைகள் வெளியேற்றப் பட்டன. 6 சுற்றுகளாக நடந்த போட்டியில் 269 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்களான நடுவனூரை சேர்ந்த கார்த்தி (25), வெள்ளக்குட்டு பகுதியை சேர்ந்த பாண்டி(55), அப்பாஸ்புரத்தை சேர்ந்த பாண்டிமுருகன்(28), அலங்காநல்லூர்- வெள்ளை யம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ்(55) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கினார். பாது காப்புப்பணியில் மாவட்ட இணைகாவல் கண்காணிப் பாளர் அருண்கபிலன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை யில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.