இராமநாதபுரம்,மார்ச் 25- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் ஜாக்டோ ஜியோ சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் இரா.சிவபாலன், அ. தமிழ்ச்செல்வன், எம்.முருகேசன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட னர். பரமக்குடியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெ. சேகர், பூபாண்டி, அ.குமார், பவுல்ராஜ் ரஷ்ய குமார் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.