districts

img

பட்டா இடத்தை அளந்து தர வலியுறுத்தி விதொச சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர், அக். 14 - கொமரமங்கலத்தில் பட்டா நிலத்தை அளந்து தர வலியுறுத்தி விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் போராட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் மடத்துக்குளம் தாலூகா மாநாடு  கணியூரில் கமிட்டி உறுப்பினர் எஸ்.என்.பால சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற் றது. கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் தொடக்கி வைத்து உரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுக்கா செய லாளர் வி.ஏ.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.  இம்மாநாட்டில் கொமரலிங்கத்தில் பட்டா  இருந்தும், இடம் இல்லாமல் உள்ள 96 குடும் பங்களுக்கு பட்டாவில் உள்ளபடி இடத்தை அளந்து தர வேண்டும்,

இதற்காக நவம்பர் மாதம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத் திருக்கும் போராட்டம் நடத்துவது. மடத்துக் குளம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் கள்,செவிலியர்களை அதிகப்படுத்துவ தோடு, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப் பதை உறுதி செய்ய வேண்டும். மடத்துக் குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில்  வேலை கேட்போருக்கு அலைக்கழிக்காமல் வேலை வழங்கிட வேண்டும். கணியூர், சங்க ராமநல்லூர், மடத்துக்குளம் ஆகிய பேரூ ராட்சிகளில் நகர்ப்புற வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் மடத்துக்குளம்  ஒன்றியத் தலைவராக கே.ஈஸ்வரன், செயலா ளராக ஈ.மாசானம், பொருளாளராக எம். காந்தி, துணைத்தலைவர்களாக ஆர்.வி.வடி வேல், எஸ்.என்.பாலசுப்பிரமணியம், துணைச் செயலாளர்களாக ஆர்.ஆறுமுகம், ஆர். ராஜேஸ்வரி உட்பட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் ஆ.பஞ்ச லிங்கம் உரையாற்றினார்.