திருவனந்தபுரம், ஆக. 9- கிப்ஃபி (கேரள உட்கட்டமைப்பு முதலீடு மேம்பாட்டு நிதி வாரியம்) வாங்கிய கடனை கேரளத்துக்குச் சொந்த மானதாக பார்ப்பதும், ஒன்றிய அரசின் சார்பில் செயல் படுத்தப்படும் திட்டங்களுக்கு இதுபோன்ற ஏஜென்சிகள் எடுக்கும் கடன்கள் ஒன்றிய அரசின் கடனாக கருதப்படு வதில்லை என்பது ஒன்றிய அரசின் பாகுபாடான நிலைபாடு என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கிப்ஃபி திட்டங்கள் குறித்த கேள்விக்கு ஆகஸ்ட் 8 செவ்வாயன்று பதிலளித்து முதலமைச்சர் மேலும் கூறியதாவது: கேரளாவின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்து வருகிறது. கிஃப்பி மிகவும் நம்பகமானதாக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் அணுகுமுறை, மாநில அரசின் பொதுவான செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளது. கிஃப்பி மூலம் பெற்ற கடனை அரசு கடனாகக் கருத வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாங்கிய கடனை ஒன்றிய அரசின் கடனாகக் கருதவில்லை. ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இதுபோன்ற ஏஜென்சிகள் எடுக்கும் கடன்கள் ஒன்றிய அரசின் கடனாக கருதப்படுவதில்லை. “அங்கே அப்படி இருக்கலாம், ஆனால் இங்கு வரும்போது கிஃப்பியில் வாங்கிய கடனை மாநில அரசின் கடனாகக் கருதுவோம் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுக்கிறது. இது ஒரு பாரபட்சமான நிலைப்பாடு. கேரளாவின் மீதான அதீத மற்றும் கொடூரமான புறக்கணிப்பின் ஒரு பகுதியாகும்’ என்றார் முதல்வர்.