மதுரை, ஏப். 18- தமிழ்நாடு அரசு கட்டு மான தொழிலாளர் நலவாரி யத்தில் பதிவு செய்த கட்டு மான தொழிலாளர்களுக்கு 10.1.2022 அறிவிப்பின்படி வீடு இல்லா கட்டுமான தொழி லாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தால் ஏற்க னவே கட்டப்பட்டுள்ள குடி யிருப்புகளின் ஒதுக்கீடு பெறுவதற்கும் மற்றும் வீடு இல்லாமல் சொந்தமாக வீட்டு மனை வைத்திருப்பவர் களுக்கு வீடு கட்டிக் கொள்வ தற்கு ரூ. 4 லட்சம் நிதி வழங் கும் திட்டத்தை அறிவித் துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் ராசாக்கூ ரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக் கப்பட்ட குடியிருப்பில் 24 கட்டுமான தொழிலாளர் களுக்கு வீடுகள் ஒதுக்கப் பட்ட ஆணையினை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், பொருளாளர் லூர்துரூபி, எல்பிஎப் நிர் வாகி கருணாநிதி, ஏஐடி யுசி நிர்வாகி தாமஸ் மற்றும் எச்எம்எஸ், ஐஎன்டியுசி நிர்வாகிகள் முன்னிலையில் கட்டுமான தொழிலாளர் களுக்கு வழங்கினார்.