districts

img

தொடக்கவேளாண் கூட்டுறவு சங்கத்தில் நகை அடகு வைத்ததில் முறைகேடு?

ஒட்டன்சத்திரம், மே 15-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர்  16 பவுன் நகையை விவசாயக் கடனில் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி அடகு வைத்துள்ளார். அதன் பின் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி  நகையை அவர் ரூ. 2,94,000.  செலுத்தி திருப்பிவிட்டதாக விவசா யக் கடன் சங்க ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆறுமுகம் அதே நாளில் உடல்நிலை  சரியில்லாமல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். ஒருவாரம் மருத் துவமனையில் இருந்ததா கவும் கூறுகின்றனர். மருத்துவமனையில் அவசரப் பிரிவில் இருந்த எனது கணவர் எவ்வாறு வந்து நகையை மீட்பார்.  மருத்துவமனை சான்றிதழ் உள்ளது என்கிறார் அவரது மனைவி சுந்தரேஸ்வரி.  கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் ஆனந்தன் எனது நகையை கையாடல் செய்துவிட்டு நாடகமாடு கிறார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர். மாவட்ட கூட்டுறவு சங்கம். முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அளித்துள்ளதாகவும் இதுவரை விசாரணை என்ற பெயரில் மனு உள்ளது. நடவடிக்கை எடுக்க வில்லை.  இதுகுறித்து உடனடி யாக விசாரணை செய்து எங்களது நகையை மீட்டுத் தரவேண்டுமென ஆறுமுகம் வலியுறுத்துகிறார்.