சிவகங்கை, மே 7- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்திடும் பொருட்டும், படித்த வேலைநாடும் இளை ஞர்களுக்கு திறன் வளர்ப்பு மேம் பாட்டு பயிற்சி அளித்திடும் பொருட் டும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கத்தின் சார்பில் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு, அவர்களை பயன் பெற செய்து வருகிறது. குறிப்பாக, பெண்களின் முன் னேற்றத்திற்காக தொலை நோக்குப் பார்வையுடன் துவங் கப்பட்ட திட்டமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம், தமி ழகத்தில் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு, பிற மாநிலங்க ளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கத்தின் சார்பில் சிவ கங்கை மாவட்டத்திலுள்ள 12 வட்டா ரங்களில் மொத்தம் 9,746 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில், மொத்தம் 1,08,000 உறுப்பினர்கள் உள்ளனர். இச்சுயஉதவிக்குழுக் களுக்கு 2022-2023-ஆம் நிதி யாண்டில் சமுதாய முதலீட்டு நிதி யாக 1,110 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.16.65 கோடியும் மற்றும் ஆதார நிதியாக 532 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ79.80 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர்களுக்கு தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்றவாறு உரிய திட்டமிடல் மற் றும் தொழில் மேம்பாடு ஆகியன குறித்தும், அரசின் பிற துறை களின் மூலம் வழங்கப்படும் மானி யத் திட்டங்கள் குறித்து தெளிவாக வும், முழுமையாகவும் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன் பெறும் வகையில் துறைரீதியாக அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட மக ளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களை ஒருங்கி ணைத்து விரிவாக எடுத்துரைக்கப் பட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத் தப்பட்டு வருகிறது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றி யம், செல்லப்பனேந்தல் ஊராட்சி யைச் சார்ந்த மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர் ரேவதி ஆடு வளர்ப்பிற்கென கடனுதவி பெற்றார். அதன் பயன்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், நான் 8 ஆம் வகுப்பு வரை படித்து, விவ சாய கூலி வேலை பார்த்து வரு கிறேன். எனது கணவருக்கு சரி யான வேலை மற்றும் போதுமான வருமானம் இல்லை. இருவரின் வருவாயைக் கொண்டு, குடும் பத்தை நடத்தி வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், என்னைப் போன்ற மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம், பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து அறிந்தேன். அதனைத்தொடர்ந்து, எங்களது பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சரஸ்வதி மக ளிர் சுயஉதவிக்குழுவின் மூலம், என்னை உறுப்பினராக இணைத் துக் கொண்டேன். அதில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் வழி யாக ஆடு வளர்ப்பு தொடர்பான பயிற்சியில் கலந்து கொண்டேன். அதன்மூலம், ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்வதற்கு ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பின் வாயிலாக ஆட்டு வங்கி அமைப்பதற்காக விண்ணப்பித்து, அதற்கான ரூ.1 லட்சம் கடன் உதவி யும் பெற்றேன்.
அத்தொகையை வைத்து ஆடு களை வாங்கினேன். துறை சார்ந்த அலுவலர்களின் அறிவுறுத்த லின்படி எனது ஆடுகளை காப்பீடும் செய்தேன். அதன் வாயிலாக, தற்போது வரை 8 ஆடுகளை, எனது குழந்தைகளின் படிப்பு மற்றும் எங்களது மருத்துவ செலவு ஆகிய வற்றிற்றாக ரூ.64 ஆயிரம் வரை விற்பனை செய்து, பயன்பெற்றுள் ளேன். தற்போது என்னிடம் 15 ஆடு கள் உள்ளன. (அதன் மதிப்பு தோரா யமாக ரூ.1,20,000-) மேலும், நான் பெற்ற கடன் தொகையில் இது வரை 6 மாத தவணையாக ரூ.30 ஆயிரம் வரை கடனை முறையாக திரும்பி செலுத்தி உள்ளேன். இதன்மூலம் ஆண்டிற்கு சராசரி யாக ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைப்பதற்கு, அரசு எனக்கு வழி வகை ஏற்படுத்தி தந்துள்ளது. நான் இந்த அளவிற்கு பொரு ளாதாரத்திலும், சமுதாயத்திலும் முன்னேற்றம் அடைவதற்கு அடிப்ப டையாகவும், காரணமாகவும் இருந்த மகளிர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்ச ருக்கு என்னைப் போன்ற அனை த்து மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித் துக் கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.