districts

img

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கக் கோரி விருதுநகரில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

விருதுநகர், மார்ச்.19- பெண்களுக்கான சம  உரிமை, சமநீதியை நிலை நாட்டிட, சுரண்டலற்ற பார பட்சமற்ற வாழ்வை ஏற்  படுத்திட, பாலியல் வன்  கொடுமையற்ற பாது காப்பான சூழலை உரு வாக்கிடக்கோரி சிஐடியு- உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விருதுநகரில் சர்வ தேச பெண்கள் தின கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். கன்வீனர் எம்.சாராள் வரவேற்றார்.  எம்.பிச்சைக்கனி, அழகுஜோதி, அம்மமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் வி.வி.எஸ்.யோகன், தொழிலாளர் உதவி ஆணையாளர் சி.மின்னல்கொடி, சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, தேனி வசந்தன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மேலும் இதில், டி.ராஜேஸ்வரி, ஆர். முருகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.