சென்னை, ஜூன் 15- அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப் பந்த முறையில் ஓட்டுநர் நடத்துநர்களை நிய மிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் (சிஐடியு) வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 15 அன்று தனித்துணை ஆணையர் ரமேஷ் முன்னிலை யில், போக்குவரத்து கழக அதிகாரிகள், அனைத்து சங்க கூட்டமைப்பில் உள்ள சிஐடியு உள்ளிட்ட 8 சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தி யாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் 900 பேருந்துகள் ஆள் பற்றாக்குறையால் தினசரி இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர். தொழிலாளர்களுக்கும் கடுமை யான பணிச்சுமை ஏற்படுகிறது. காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அதில், வாரிசு வேலை கேட்டு 13 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக் கிடப்போருக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும். உயர்கல்வி தகுதியை காட்டி பணி மறுக்கக் கூடாது. ‘நான் ஐடிஐ ஹெல்பர்’ என்ற கேட்டகிரியில் குறைவாக படித்துள்ளவர்களை பராமரிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
நடைமுறைகளை மீறாதீர்
பணி நியமனம், நிரந்தரம் ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை மீறக் கூடாது. அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் முறை கூடாது என்பதை சுட்டிக்காட்டினோம். கடந்த ஒப்பந்தத்திற்கு பிறகு நிலுவைத் தொகை களை (அரியர்ஸ்) வழங்கவில்லை. கொரோனா கால ஊக்கத் தொகையை கூட தராமல் உள் ளது போன்ற அம்சங்களை புகாராக தெரி வித்துள்ளோம். ஓய்வூதியர்களுக்கு அக விலைப்படி 90 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது குறித்தும் பேசினோம். இவை குறித்தெல்லாம் அடுத்த பேச்சு வார்த்தைக்கு உள்ளாக எவ்வளவு காலி பணி யிடம் உள்ளது, அவற்றை நிரப்ப எவ்வளவு காலம் ஆகும் என்பன போன்ற அம்சங்களை நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும். மேலும், இதற்கான பணிகளை தொடங்கி இருக்க வேண்டும் என்று இணை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அவுட்சோர்சிங் கூடாது, பணி ஓய்வு பெற்ற ஓட்டுநர்களை மீண்டும் பணிக்கு எடுக்க கூடாது. தற்போதைய பணி நிலை தொடர வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். ஜூலை 4 அன்று அடுத்த பேச்சுவார்த்தை நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிகுமார், துணைப் பொதுச் செய லாளர்கள் வி.தயானந்தம், கனகராஜ் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.