திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் பயிற்சி ஆட்சியர் பிரியங்கா அலுவலகத்தில் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின்பு வளமீட்பு பூங்காவிற்கு சென்று உரம் தயாரிக்கும் முறை, மிதியடி, பேப்பர் கழிவுகளை பேக்கிங் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செயல் அலுவலர் பெ.செல்வராஜ், பேரூராட்சிமன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சிறப்பான முறையில் வளமீட்பு பூங்காவை பராமரித்து வருவதற்கு பயிற்சி ஆட்சியர் பிரியங்கா பேரூராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.