தேனி ,மே 26- தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா துவக்கி வைத்தார் . நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே ,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையின் முதல்வர் மரு. அழ.மீனாட்சிசுந்தரம், முதன்மைக்கல்வி அலுவலர் ச.செந்தி வேல்முருகன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 427 பள்ளி வாகனங்களும், உத்தமபாளையம் ஆய்வா ளர் அலுவலகத்திற்குட்பட்ட 283 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 710 வாகனங்கள் தேனி மாவட்டத்தில் உள்ளன. பள்ளிகள் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முகாமில் கலந்து கொள்ள இயலாத பள்ளி வாகனங்கள் 26.05.2023 அல்லது 27.05.2023 ஆகிய தினங்களில் வட்டார போக்குவரத்து அலுவல கத்தில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து சான்று பெற்ற பின்புதான் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .