தேனி,ஜன.20- தேனி மாவட்டத்தில் கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை - பொதுக் கணக்குக்குழுவினர் ஜன வரி 20 அன்று அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். தமிழ்நாடு சட்டப் பேரவை - பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் கு.செல் வப்பெருந்தகை , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன், பொதுக் கணக் குக் குழுவின் உறுப்பினர் கள் பூண்டி கே.கலை வாணன் (திருவாரூர்), ஓய்.பிரகாஷ் (ஓசூர்), ஈ.ராஜா (சங்கரன்கோயில்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக் குமார் (பெரியகுளம்) தமிழ்நாடு சட்டப்பேரவை யின் செயலாளர் கி.சீனி வாசன் ஆகியோர் முன்னி லையில் ஜனவரி 20 அன்று தேனி மாவட்டம், தேனி அரசு கள்ளர் மாணவர் விடுதி, முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, பணியாளர்கள் எண்ணிக் கை, வருகை பதிவேடு, விடு தியில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளி யலறை, கழிப்பறை, விடுதி யில் தங்கும் மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதி வேடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தரம், விளை யாட்டு உபகரணங்கள், உடற் பயிற்சி கூடம், பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி, சுகாதார வசதி, ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் முதியோர் நல் வாழ்வு பிரிவு மற்றும் தனி முதியோர்களுக்கான பிசியோதெரபி பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்த னர். பெரியகுளம் அரசு தேட்டக்கலைப்பண்ணை யில் தாய் செடி நடவு செய் யப்பட்டுள்ள எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, மண்புழு கூடம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அலகு, சாக்லேட் உற்பத்தி அலகு, பழம் மற்றும் காய் கறிகள் பதனீட்டு மையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.