மதுரை, டிச.8- மதுரை கூடல்நகர், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் நின்று செல்ல வேண் டும் என்று வலியுறுத்தி ரயில்வே கோட்ட ஆலோச னைக்குழு உறுப்பினர் எஸ்.பாலவேலன் ரயில்வே கோட்ட தென்னக மேலாளரி டம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் ஆன் லைனில் நடைபெற்றது. புதிய ரயில்வே ஆலோசனைக் குழு அமைக்கப்பட்ட பிறகு இதுவரை இக்குழுவின் கூட்டத்தை நேரடியாக நடத்தவில்லை. மீண்டும் ஆன்லைனில் டிசம்பர் 15 - நடத்துவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. மற்ற கோட்டங்கள் போல நேரடியாக ஆலோச னைக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும். மதுரை-தஞ்சா வூர்-மயிலாடுதுறை வழி யாக சென்னைக்கு வாரம் இருமுறை இயங்கக்கூடிய மதுரை மஹால் எக்ஸ்பி ரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே இரவு நேர ரயிலாக இயங்கி வரு கிறது. தற்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு ஷோடோ (நிழல் ரயில்) எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை யை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். மதுரை மாவட்டம் கூடல் நகர், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பாளையம் ரயில் நிலை யங்களில் பயணிகள் ரயிலை நிறுத்த முன்வர வேண்டும். வாரம் இருமுறை மதுரை- கொல்கத்தா இடையே வாரம் இருமுறை ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார். மனு அளிக்கும் போது வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் உட னிருந்தார்.