districts

img

பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.20- நல்லம்பள்ளி வெங்கட்டம்பட்டியில் இருந்து வீரிசெட்டிப் பட்டிக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மாதேமங்க லம் ஊராட்சி வெங்கட்டம்பட்டியில் இருந்து வீரிசெட்டிபட்டி கிராமத்திற்கு 2020-2021ல் தார்சாலை போடப்பட்டது. சாலை போட்ட சில மாதங்களிலேயே பழுதடைந்தது. இந்த சாலை யில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் சாலை பழுதாகி ஜல்லிகற் கள் பெயர்ந்து விட்டன. தரமற்ற சாலையில் இருசக்கர வாக னங்கள் செல்ல முடியவில்லை. வாகனங்கள் செல்லும் போது சாலையில் புளுதி பறக்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்  விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.  எனவே வெங்கட்டம் பட்டியில் இருந்து வீரிசெட்டிப்ட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.