districts

தொடர் மழையில் பயிர்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள்

திருநெல்வேலி,நவ .17- நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் முருகா னந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் வயல்களில் மழைநீர் தேங்கும் நிலையில் மேற் கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து அறிவு றுத்தப்படுகிறது. வயலில் தேங்கியுள்ள மழைநீரை உட னடியாக வடிகட்ட வேண் டும். இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு இலைவழி உரமிட வேண்டும். 1 கிலோ சிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல்களை தடுக்க 1  கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லி யை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும். இதை 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண் டும்.  மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ டி.ஏ.பி.உரத்தினை 10 லிட்டர் தண் ணீரில் முதல் நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டிய கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படும் பொழுது வேம்பு சார்ந்த மருந்து களை பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயி கள் தங்கள் நெல், உளுந்து, பாசிப்பயிறு மற்றும் மக்காச் சோள பயிர்களை முன் கூட்டியே பயிர் காப்பீடு செய்தால் எதிர்பாராத இழப்பில் இருந்து  தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று அதில் கூறப் பட்டுள்ளது.