இராமநாதபுரம்,ஜன.19- 1956 ஜனவரி 19 அன்று இதே நாளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசிய மயமாக்கப்பட்டது இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பரமக்குடி எல்ஐசி முன்பாக வாயில் கூட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கே. கோட்டையன் , எஸ். ரவிச்சந்தி ரன் ஆகியோர் பேசினர். காரைக்குடி எல்.ஐ.சி அலுவல கம் முன்பு தலைவர் குணசேகரன் தலைமையில் வாயிற் கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் எல்ஐசி கிளை முன்பாக கிளைத் தலைவர் எம். மாரிமுத்து தலைமையில் கூட்டம் நடை பெற்றது. கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி சிறப்புரை யாற்றினார்.