districts

img

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி, செப்.19- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை  பெய்ததால் வைகை, முல்லைப்  பெரியாறு உள்ளிட்ட அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகளை வனத்துறையினர் வெளியேற்றினர். வைகை அணையில் இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இத னால் விவசாய பணிகளில் தாமதம்  காட்டி வந்தனர். இந்நிலையில் திங்  களன்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.  திங்கள்கிழமை வரை 239 கன  அடியாக இருந்த வைகை அணை யின் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை  332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்  கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.  முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து  511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது.  மஞ்சளாறு அணையின் நீர்மட் டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்  டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வரு கிறது. 3 கன அடி நீர் திறக்கப்படு கிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.  கும்பகரையில்  திடீர் வெள்ளப்பெருக்கு மேற்குத் தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலை வனப்பகு திகளில் தொடர் மழை காரணமாக  கும்பக்கரை அருவியில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அரு வியில் குளித்த சுற்றுலா பயணி களை வனத்துறையினர் வெளி யேற்றினர். செவ்வாய்க்கிழமை நண்பகல்  முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், பிற்பகல்  3 மணி முதல் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  மழையளவு பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரிய குளம் 0.5 மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.