புதுச்சேரி, ஜூன் 24- புதுவை கதிர்காமத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 180 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில் 131 இடங்கள் புதுவை மாண வர்க ளுக்கும், பிற இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ ஆணையம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுத்தி வைத்திருந்தது. இது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் தற்போது மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. 5 ஆண்டுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுவையிலுள்ள 3 தனியார் மருத் துவ கல்லூரிகளில் ஆண்டுதோறும் அரசு இடங்கள் பெறப்படும். இதில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகள் கடந்த ஆண்டைவிட தலா 100 இடங்கள் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்த மருத்துவக்கல்லூ ரிகளில் அரசு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிவில் பிம்ஸ் கல்லூரி 56, மணக்குள விநாயகர் கல்லூரி 91, வெங்கடேஸ்வரா கல்லூரி 92 என மொத்தம் 239 இடங்க ளில் அரசு ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு அரசு மருத்து வக்கல்லூரியில் 131 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 370 இடங்கள் அரசு ஒதுக்கீடு புதுவை மாண வர்களுக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 77 இடங்கள் அதிகம். இதுதவிர ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுவை மாநில ஒதுக்கீடு 64 இடங்கள் உள்ளன.