விருதுநகர், ஜூலை 9- விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலையானது ரூ.1390க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.35 உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.1425க்கு விற் கப்படுகிறது. இதனால், எண்ணெய் பலகாரங்கள் விலை மற்றும் தேநீர் கடைகளில் அன்றாடம் விற்கப்படும் வடை வகைகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மல்லி 40 கிலோ லையன் வகையானது கடந்த வாரம் ரூ.2700க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.2800க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம் புதுஸ் லையன் வகை யானது ரூ.13,700க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்து, தற்போது ரூ.14ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு இந்தியா நாடு வகை 100 கிலோ ரூ.8ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்ந்து தற்போது ரூ.8200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே, தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையானது கடும் உச் சத்தை அடைந்துள்ளது. இதனால் பொது மக்கள் தங்களுக் குத் தேவையான உணவு வகைகளை சமைத்து உண்ண முடி யாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், பாசிப் பயறு, துவரம் பருப்பு, மல்லி, பாமாயில் ஆகியவற்றின் விலை உயர்வால் பொது மக்கள் இரட்டை தாக்குதலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 மட்டும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10ஆயி ரத்திற்கு விற்பனையாகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.