districts

img

திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில்

சிவகாசி, மே 15- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவத் தலங்க ளில் குடவறை கோவில் என்ற சிறப்பும் இந்தக் கோவி லுக்கு உண்டு. மிகப் பழ மையான இந்தக் கோவி லில் பல கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் அரிய வகை புடைப்புச் சிற்பம் இருப்பதாக கூறப் பட்டு வந்தது. இதையடுத்து சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவின் பேரில், கோவி லின் அருகில் மண் மூடிக்கிடந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, அங்கு மறைந்து கிடந்த புடைப்புச் சிற்பம் மீட்டெ டுக்கப்பட்டது. இது குறித்து கோவி லின் கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களில், குதிரை வீரன் மற்றும் போர் வீரன் புடைப்புச் சிற்பமான இது  கிபி 17-18-ஆம் நூற்றா ண்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.  இது குறித்து 1922-ஆம் ஆண்டு தொல்லியல் ஆவணங்கள், “திருத் தங்கல் மலைக்கோவில் வடக்குப் பகுதியில் உள்ள தனிப் பாறையில் உள்ளது. இது ஒரு நடுகல் சிற்பத் தொகுதியை ஒட்டிய கல் வெட்டாகும். ‘கலங்காத கண்ட நாயக்கருக்காக’ இத் திருத்தங்கல் சீமை ரத்தக் காணிக்கையாக கொடுக்கப் பட்டதைத்” தெரிவிக்கிறது.