இராமநாதபுரம், நவ.30- காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் அரசு செல வில் ஆர்எஸ்எஸ்ஸின் மத வெறி கருத்துக்களை மாண வர்களிடம் புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இராமேஸ்வரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நெ.வில்லி யம் ஜாய்சி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சம்சீர் முகமது, மாநில துணைச்செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலா ளர் வசந்த் சுர்ஜித், மாநிலக் குழு உறுப்பினர் சந்தோஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.