சின்னாளப்பட்டி, ஏப்.9- திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ‘இந்தியா’ கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆத ரித்து பழனி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கன்னிவாடியில் திமுக மாநி லங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திங்கட்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘எதிர்கால இந்தியாவை தீர்மா னிக்கிற தேர்தல் இது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு உருளை விலை உயர்த்தப் பட்டது. இதன் மூலம் ரூ.7.75 லட்சம் கோடியும், பொதுத் துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்க் கப்பட்டதன் மூலம் ரூ.4.50 லட்சம் கோடியும் அரசுக்கு கிடைத்திருக்கி றது.
இந்த பணம் முழுவதும் பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி யாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கடன் பிரச்சனையால், 11,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேபோல, நாடாளுமன்றத்தில் பணக்காரர்க ளுக்கு ஆதரவான சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட்டன.
ஆனால், வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்கும்போது அனை வரும் சமம். அரசியல் சட்டம் தந்துள்ள உரிமை என்ற வாக்குச் சீட்டுடன், அனைத்து மக்களும் கம்பீரமாக செல்ல வேண்டும். வாக்கு செலுத்தும் போது ஆட்டோ ஓட்டுபவரும், அம்பானியும் ஒன்றுதான்’’ என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர் சிவகுருசாமி, நகரச் செய லாளர் இளங்கோவன், பேரூராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.பூமயில், வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருள் செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.