தேனி, ஜூலை 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இடுக்கி மாவட்டக்குழு உறுப் பினரும், சந்தன்பாறை ஊராட்சி தலைவருமான டி.ஜே.ஷைன் ஞாயி றன்று இரவு மாரடைப்பால் காலமா னார். அன்னாரது உடல் சந்தன் பாறை கட்சியின் ஏரியாக்குழு அலு வலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் கேரள மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.கே.ஜெயச்சந்திரன், மாவட்டச் செய லாளர் சி.வி.வர்கீஸ், கே.கே.மோகனன், வி.என்.மோக னன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் . கட்சியின் தேனி (தமிழ்நாடு) மாவட்டக்குழு சார்பில் மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, முன்னாள் வீடுகட்டும் சங்க தலைவர் ஆர்.சண்முகம், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், விவசாயிகள் சங்க தலைவர்கள் எஸ்.கே.பாண்டியன், இ.மூக்கையா உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.