இராமநாதபுரம், மே 23- அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மக்க ளுக்கும் கிடைத்தி டும் வகையில் செயல்பட்டு மக்கள் எதிர்பார்ப்புக்கேற்ப மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.விஷ்ணு சந்திரன் தெரி வித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மே 22 அன்று புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பி.விஷ்ணு சந்திரன் பதவி ஏற்றுக் கொண்டு கூறுகையில், அரசின் திட்டங்களை கடைக்கோடி கிரா மங்கள் வரை கொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படு வேன். நான் முதல் முறையாக அரசு பணிக்கு வந்து பணியாற்றியது இந்த மாவட்டத்தில் தான். மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற முறையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். நாள் தோறும் என்னை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைத்திட செயல்படுவேன். என்னை பொறுத்தவரை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அது மட்டுமின்றி தொலைபேசியிலும் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதி லும் அரசின் திட்டங்கள் பொது மக்களுக்கு சென்றடைவதிலும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்தார்.