districts

img

தெருவில் சிம் கார்டு விற்பனை: மனித உரிமை ஆணையம் தலையீடு

திருவனந்தபுரம், அக்.15- எந்தவித கட்டுப்பாடும் இன்றி தெருக்களில் மொபைல் சிம்கார்டு விற்பனையைத் தடை செய்யக் கோரிய மனு மீது மனித உரிமை ஆணையம் அறிக்கை கோரியது. நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நகர போலீஸ் கமிஷனருக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி அந்தோணி டொமினிக் உத்தரவிட்டார். இதுகுறித்து ஜி தமீம் அளித்த புகாரில், ஆதார் அட்டையை காட்டி வாங்க வேண்டிய சிம்கார்டு, விதிமுறையின்றி தெருவோரங்களில் விற்பனை செய்வதாகவும், இவற்றை பயன்படுத்தி தேசத்துரோக செயல்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.