மதுரை, ஏப்.5- திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் சாலையில் பெருங் குடி ஈஸ்வரன் நகரில் வசித்து வரும் அருந்ததியர் சமூக மக்களின் 120 பட்டாக்கள் காலாவதியாகி விட்ட தாகக் கூறியும், மேலும், அவர் களுக்கு வழங்கப்பட்டிருந்த பட் டாக்களை வேறு நபர்களின் பெயர் களுக்கும் மாற்றியும் மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறி விப்பானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிலையூர் அருகே உள்ளது ஈஸ் வரன் நகர். இங்கு முழுக்க முழுக்க அருந்ததியர் சமூக மக்களே வசித்து வருகின்றனர். இவர்கள் கழிவுப் பொருட்களைச் சேகரித்தல், சாலை களைக் கூட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட சமூகத்தின் கடைநிலைப் பணிகள் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களில் 248 பேருக்கு, கடந்த 16-4-1995 அன்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் அருந்ததியர் மக் கள் பலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பெருங்குடி ஊராட்சிக்கு வரியும் செலுத்தி யுள்ளனர். 248 குடும்பங்களில் பலர் வீடு கட்டியுள்ளனர். பலர் கட்ட டப்பணியை தொடங்கி இடையில் நிறுத்தியுள்ளனர். சிலர் வீடு கட்டு வதற்கான பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். 120 பட்டாதாரர் கள் இடத்தை காலியாக வைத் துள்ளனர். எனினும் முறையாக வரி செலுத்தி வந்துள்ளனர்.
அதிகாரிகளின் திடீர் ‘சபதம்’
இந்நிலையில், வீடற்றவர் களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் மதுரை மாவட்டம் பின் தங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் சமீபத்தில் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். இதை யடுத்து பட்டா வழங்குவதில் ‘சாதனை’ படைப்பதற்காக ‘சப தம்’ ஏற்ற அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்ட இடங்களை கண்டறிந்து ஆட்சி யருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள னர். இந்தப் பின்னணியிலேயே, பெருங்குடி ஈஸ்வரன் நகர் அருந்த தியர் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 248 பட்டாக்களில் 120 பட்டாக்களை ரத்து செய்து, அந்தப் பட்டாக்களை வேறு நபர் களின் பெயருக்கு மாற்றம் செய்து, இ-பட்டா வழங்கப்பட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு இங்கு வசிப்பவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தியதாகவும் அதன் பேரி லேயே பட்டாக்களை ரத்து செய்த தாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையையும், அருந்ததியர் மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2016 வரை குடிசைகள் அமைத்து வரி செலுத்தியவர்களை திடீரென எவ்வாறு அப்புறப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி, அருந்ததியர் மக்கள் மாவட்ட நிர்வா கத்திற்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், இடத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்ற அருந்ததியக் குடும்பங்களிடம் இதுபற்றி பேசியபோது, “நாங்கள் என்ன வேலை செய்கிறோம்; எங்களின் வருமானம் என்ன என்றெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியும். இதிலும் பலர் மாநக ராட்சியில் தினக்கூலி, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள். இந்தச் சூழ லில்தான் எங்களில் பலர் வீடு கட்ட முடியாமல் இன்று வரை உள் ளோம். இதற்குக் காரணம் வறு மைதான். ஆனால், அதனைக் கருத் தில் கொள்ளாமல், எங்கள் மீது கொஞ்சமும் கருணை காட்டாமல், சட்டவிதிகளை மட்டுமே காரணம் காட்டி, எங்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்த சொந்த வீட்டு மனை வாய்ப்பையும் பறிப்பதை ஏற்க முடியாது. பட்டியல் வகுப்பி னரிலேயே மிகவும் அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர் மக்களின் நலனுக்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கினார். அதை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மதுரை மாவட்ட நிர்வாகம் தடாலடி யாக இந்த நடவடிக்கையை எடுத்தி ருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எனவே, எங்களது இடத்தை வேறு கொடுத்துள்ளதை நிறுத்திவைக்க வேண்டும். அந்த பயனாளிகளுக்கு வேறொரு இடத்தை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
நழுவும் வட்டாட்சியர்
பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள், இதுதொடர்பாக திருப்ப ரங்குன்றம் வட்டாட்சியரைச் சந் தித்தும் முறையிட்டனர். வீடு கட்டு வதில் தங்களுக்குள்ள பிரத்யோ கப் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறினர். அவற்றைக் கேட்டுக் கொண்ட வட்டாட்சியரோ, “நீங்கள் கூறும் விஷயங்கள் எல்லாம் இப் போதுதான் எனக்குத் தெரியும்; ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்” என்றார். எனினும், பட்டாக்களை அருந்த திய மக்களுக்கே புதுப்பித்து வழங்கவேண்டும் என்ற கோரிக் கைக்கு பிடிகொடுக்காமல் நழுவி னார். இதனால், வட்டாட்சியர் அலு வலகத்திலிருந்து ஆட்சியரைச் சந்திக்கப் புறப்பட்ட அருந்ததியர் மக்கள், “காலியாக உள்ள இடத் தின் பட்டாவை ரத்து செய்து வேறு நபர்களுக்கு கொடுக்க எடுக்கப் பட்ட நடவடிக்கையின் பின்னணி யில் ஒரு பிரபல அரசியல் கட்சியின் பிரமுகரும், ஒரு வட்டாட்சியரும் உள்ளனர்; இவர்கள் தனிநபர்களி டம் பட்டா வாங்கித் தருவதாக கூறி, நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படை யிலேயே பணம் வாங்கிக் கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்ற னர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது ஏற்கெனவே குற்றச்சாட் டுக்களும் உள்ளன. இந்த நபர்கள் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப் படும் வீட்டுமனைப் பட்டாக்களைக் குறிவைத்து, அவற்றை ரத்து செய் வதற்கான வேலைகளில் ஈடுபடு வதை வாடிக்கையாக கொண்டுள் ளனர்” என்றும் குற்றம் சாட்டினர்.