districts

img

பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய வீடு, கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்

தேனி ,பிப்.3- தேனியில் பாதையை ஆக்கிரமித்து பாஜக பிர முகர் கட்டிய  குடியிருப்பு,  கடைகள் நீதிமன்ற உத்த ரவுப்படி அகற்றப்பட்டது.இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பாஜக பிரமுகரின் குடும்பத் தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . தேனி - அல்லிநகரம் நக ராட்சிக்கு உட்பட்ட ஒண்டி வீரன் நகரில் வசிக்கும் சின்ன  சுருளி என்பவர் தனது வீட் டிற்கு உள்ள பாதையை அங்குள்ள சில தனிநபர் கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட நக ராட்சிக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன் உத்தரவிட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி 3 வெள்ளியன்று ஒண்டி வீரன் நகரில் உள்ள ஆக்கிர மிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறை யினருடன் இணைந்து, காவல்துறையினர் பாது காப்புடன் தேனி - அல்லி நகரம் நகராட்சி அதிகாரி கள் ஈடுபட்டனர்.  இதற்கு அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்  நகராட்சி மற்றும் வருவாய்த் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்ற உத்த ரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் தேனி மாவட்ட பாஜக ஓ.பி.சி.அணி துணைத் தலைவராக உள்ள போஸ் என்பவர் தனக்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டார். ஆனால் அதிகாரிகள் தரப் பில், பலமுறை நோட்டீஸ்  வழங்கி ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்று மாறு அறிவித்ததாகவும் தற்போது கூடுதல் கால அவ காசம் வழங்க இயலாது எனக் கூறினர். அதனை ஏற்க மறுத்த போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் ஆக்கிரமிப்பு குடி யிருப்பு மற்றும் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களது எதிர்ப்பை மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சியினர் ஈடுபட்டனர். அவர்களுடன் தேனி மாவட்ட பாஜகவினர் மற்றும் நகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அங்கிருந்து போஸ் மற்றும் அவரது குடும்பத்தி னர் சென்று விட்டனர்.