திண்டுக்கல், ஜுன் 28- திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்து வமனை ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மருத்துவத்துறையில் உள்ள அனைத்து நிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை ரத்து செய்து வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவம், மற்றும் பொது சுகாதா ரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் பணியாற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக்கல் லூரி, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவனைகள், 9 இ.எஸ்.ஐ. மருத்துவமனை, 300 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த இயக்கம் நடைபெற்றது. (ந.நி.)