தேனி, ஏப்.10- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், பல் வேறு மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மாவட்ட அள விலான சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினார் . கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மதுமதி, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) ந.சாந்தி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.வாடிப்பட்டி மக்கள் கோரிக்கை பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் மூன்றாவது வார்டில் உள்ள பொதுக் கழிப்பி டம் மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் தனியார் பராமரிப்பில் உள்ளது. தண்ணீர்த் தொட்டி இரண்டாண்டுகளாக சுத்தம் செய்யா மல் உள்ளது. ஆறாவது வார்டில் இரண்டு பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. ஊரக வேலைத் திட்டத்தில் முறை கேடு நடக்கிறது என மனுவில் தெரிவித்துள்ள னர். மாற்று இடம் கேட்டு மனு கம்பம் சுருளிப்பட்டி சாலையில் குடி யிருக்கும் 68 குடும்பங்களைச் சேர்ந்த வர்களை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. கூடலூர் அருகே தம்மனம்பட்டியில் நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட குடி யிருப்புகளில் இடம் தருவதாக சொல்கி றார்கள். குழந்தைகள் கம்பம் நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே நகரில் மாற்று இடம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்தனர். தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முரு கன் மனைவி சாந்தி கொடுத்த மனுவில், “தனது மகன் ராஜேஸ்வரனை கடுமையான நிதி சுமையில் எம்பிஏ படிக்க வைத்தேன். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரு கிறார். திருமணமாகி அவர் தனியாக வசித்து வருகிறார். கணவர் முருகன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். மாதம் ரூ.2 ஆயிரம் மட்டுமே தருகிறார். மருத்துவச் செலவு ரூ.7 ஆயிரம் வரை ஆகிறது. குடும் பத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.