districts

img

வன உரிமை சட்டத்தை அமலாக்கக் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூன் 27- கொடைக்கானலில் வன உரிமை சட்டத்தை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் அஜாய் கோஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பொன் னுச்சாமி, தமிழ்நாடு காபி விவ சாயிகள் சங்க மாநிலச் செயலா ளர் எம்.செல்லையா உள்ளிட்ட பலர் பேசினர்.  கொடைக்கானலில் வசிப்போ ருக்கு பட்டா வழங்க வேண்டும். வனவிலங்குகளால் உயிரிழப்பு, பயிர் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மூஞ்சி கல் முன்பிருந்து கோட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் பேர ணியாக புறப்பட்டு சென்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க வட்ட நிர்வாகிகள் முத்துசாமி, ராஜேஷ் கன்னா, கோபிநாத் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.