மதுரை கண்ணனேந்தல் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு, உச்சப்பரம்பு மேடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு மற்றும் போர்வெல் சின்டெக்ஸ் ஆகியவற்றை மதுரை மக்களைவ உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம், எஸ்.பாலகிருஷ்ணன், ஜெகநாதன், நாகராஜ், சக்திவேல், கண்ணன், மற்றும் கிளைச் செயலாளர்கள் செ.ஆஞ்சி, செல்வம், சௌந்தர், மெரினா சிவானந்தம், மோகனவிஜயா, உட்பட பலர் பங்கேற்றனர்.