districts

img

கண்மாய் உடைந்தன; மரங்கள் முறிந்தன; சாலைகள் சேதம்

விருதுநகர், மே 10- விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இரு நாட்களாக இடி,  மின்னலுடன் கூடிய பலத்த மழை  பெய்தது. இதனால், கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. சாலையோ ரங்களில் இருந்த மரங்கள் உடைந்து விழுந்தன. வீடு ஒன்று  இடிந்து விழுந்தது. பல்வேறு பகுதி களில் சாலைகள் சேதமடைந்தன.  விருதுநகர் மாவட்டம் முழு வதும் திங்களன்று 232.70 மி.மீ  மழை பெய்தது. இதில் அதிகபட்ச மாக விருதுநகரில் மட்டும் 7.3 செ.மீ  மழை பெய்தன. சுமார் 3 மணி நேரம் இடி மின்னல் மற்றும் பலத்த காற்று டன் மழை பெய்தது. இதேபோல், செவ்வாய்க் கிழமை 165.40 மி.மீ மழை பெய்தது. இதில் விருதுநகரில் மட்டும் 4.5  செ.மீட்டர் மழை பெய்தது. அப்  போது, பலத்த காற்று வீசியதால்  விருதுநகர்-அழகாபுரி சாலையில் தனியார் கல்லூரி அருகே சாலை யோரம் இருந்த இரு பெரிய மரங்  கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை யினர் தனியார் ஜேசிபி உதவி யுடன் மரக் கிளைகளை அப்புறப் படுத்தினர். இதையடுத்து, போக்கு வரத்து சீரானது. இதேபோல், அருப்புக் கோட்டை சாலை மேம்பாலம் அருகே மரம் ஒன்று உடைந்து விழுந்  ததில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை நீர் 

விருதுநகர் வடமலைக் குறிச்சி சாலைப் பகுதியில் உள்ளது கலை ஞர் நகர். இங்கு மழை நீர் செல்ல  வழியின்றி குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. இதனால், அப்பகுதி பொது மக்கள் பெரும் அவ திக்குள்ளாகினர். அவ்வழியே இரு  சக்கர வாகனங்களில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  எனவே, பலர் தங்களது வாக னங்களை மேடான பகுதியில் நிறுத்தி விட்டு, தண்ணீருக்குள் நடந்தே வீடுகளுக்கு சென்றனர். முதியோர்கள் எங்கும் செல்ல முடி யாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந் தனர். மேலும் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், இரவு முழுவதும் அப்பகுதி பொது மக் கள் கடும் அவதிக்குள்ளாகினர். உடனடியாக தேங்கியுள்ள மழை  நீரை அப்புறப்படுத்த வேண்டு மென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த னர்.

இடிந்து விழுந்த வீடு-சாலைகள் சேதம் 

விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில் கிழக்கு தெரு வில் வெள்ளைச்சாமி என்பவரின் மண் வீடு இடிந்து விழுந்தது.  விருதுநகர் நகராட்சி பகுதி களில் சாலையோரங்களில் உள்ள  மழை நீர் வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதன் கார ணமாக மழை நீர் வடிகால்களில் செல்லாமல், சாலையின் நடுவே பெருக்கெடுத்து ஓடியது. எனவே,  நகரின் முக்கிய சாலைகளான ரயில்வே பீடர் சாலை, பாத்திமா நகர் மெயின் ரோடு, புளுகணூ ரணி சாலை, புல்லலக்கோட்டை சாலை, பாவாலி சாலை, ஆகி யவை சேதமடைந்துள்ளன. கண்மாயில் உடைப்பு  விருதுநகர் அருகே சீனியா புரத்தில் உள்ள கண்மாயில் கன மழையின் காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கண்மாயில் உள்ள நீர் வீணாக வெளியேறியது. அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தாங்க ளாகவே உடைப்பை சரி செய்யும்  பணியில் ஈடுபட்டனர். மேலும், சேத மடைந்த கரையை உடனடியாக சீர மைக்க வேண்டும் என பொது மக்  கள் மாவட்ட நிர்வாகித்திற்கு கோரிக்கை விடுத்தனர்.