districts

மதுரை முக்கிய செய்திகள்

செல்போனில்  கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்; மாணவி தற்கொலை

தேனி, ஜன.19- ஆண்டிபட்டி அருகே செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (50). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் பவித்ரா (19). தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில் செவ்வாயன்று மாணவி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன் றுள்ளார்.  அப்போது சத்தம் கேட்டு வந்த பெற் றோர் மாணவியை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜதானி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த  இன்று சிறப்பு முகாம்

தேனி, ஜன.19- தேனி மாவட்டத்தில் மருத்துவம், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் கண்டுள்ள 60 வயது மேற்பட்ட வர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஊக்கு விப்பு தவணை சிறப்பு முகாம் வியாழ னன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முதல் தவணை தடுப்பூசி 7,76,671 நபர் களுக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி 5,77,272 நபர்களுக்கும் 47,331 பள்ளி மாணவ-மாணவியருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  10.01.2022 முதல் கொரோனா ஊக்கு விப்பு தவணை தடுப்பூசி முகாம்கள் நடை பெற்று வருகின்றன. இதுவரை 1,506 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஊக்கு விப்பு தவணையாக செலுத்தப்பட்டுள் ளது.  தமிழக அரசு அறிவித்துள்ளபடி அரசு மற்றும் தனியார் துறையினை சார்ந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அலுவ லர்கள், பணியாளர்கள், காவல்துறை யைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கும் சர்க்கரை நோய் இரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய் கண்டுள்ள 60 வய திற்கு மேற்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பு தவணை செலுத்துவதற்கு ஒவ்வொரு வாரமும் வியாழனன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. இரண்டாவது தவணை பெற்ற நாளி லிருந்து 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்துள்ளவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பு தவணை செலுத் திக்கொள்வதற்கு தகுதியானவர்கள்.

துணிக் கடையில் ரூ.2.65 லட்சம் திருடிய வடமாநில நபர்கள்

சிவகாசி, ஜன.19- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஜவுளிக் கடையில் பையில் வைத்திருந்த ரூ.2.65 லட்சத்தை வடமாநில நபர்கள் திரு டியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள் ளது. திருத்தங்கல் ஸ்டான்டர்டு காலனி யைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பால்பாண்டி (42). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலை யில், வங்கியில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக வேறு நகைகளை இரு வங்கிகளில் அடகு வைத்து ரூ.2.65 லட்சம் பெற்றுள்ளார். அதை தனது கடைக்கு ஒரு பையில் கொண்டு வந்து மேஜையில் வைத்துள் ளார். அப்போது, அங்கு அவசர, அவசர மாக ஜவுளி எடுப்பது போல வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், துணியை வாங்கியதோடு, பணத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

மருத்துவர், நர்ஸ், காவலர் என  தேனியில் 291 பேருக்கு கொரோனா

தேனி, ஜன.19- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கேரள மாநிலத்துக்கு ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது, இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாநில எல்லைகளில் எந்தவித சோதனையும் நடத்தப்படாததால் தொழிலாளர்கள் தினசரி பணிக்கு சென்று வருகின்றனர். 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் 30 பேருக்கு உறுதியாக தொற்று கண்டறியப்படுகிறது. செவ்வாயன்று ஒரே நாளில் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்களன்று 331 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதன் தீவிரம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதனன்று 1193 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 5 பேருக்கும், திண்டுக்கல் நகரை சேர்ந்த மருத்துவர், பெரியகுளம் அரசு மருத்துவர், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை செவிலியர், கம்பம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 செவிலியர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு செவிலியர், தேவாரம் காவலர் குடியிருப்பில் 51 வயது காவலர், 15வயது இளம் பெண் உட்பட 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1662 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் பலர் அரசு, தனியார் மருத்துவமனைகள், வீட்டு தனிமையிலும் உள்ளனர்.

ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள்

தேனி, ஜன.19- அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெரியகுளத்தில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள் அனுஷ்டிக்கப்பட்டது. ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள் ஆண்டு தோறும் ஜனவரி 19 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. தேனி மாவட் டம் பெரியகுளம் எல்ஐசி கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரி கள், முதல்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு கிளை தலைவர் டி.பி.சரவணகுமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் அகமது ஆதம் சிறப்புரையாற்றினார். மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் சீலா தேவி நன்றி கூறினார். கூட்டத்தில் எல்ஐசி பங்குகளை ஒன்றிய அரசு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை இராமேஸ்வரம் மீனவர்கள்  உண்ணாவிரதம் தொடக்கம்

இராமேஸ்வரம், ஜன.19-  இலங்கையில் சிறையில் உள்ள 56 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வெள்ளி யன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகின்றனர்.  இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற போது 10 விசைப் படகுகள் மற்றும் 68 மீனவர்களை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 10 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 12 மீன வர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். 9 மீனவர்கள் நாடு திரும்பிய நிலையில் மூன்று மீனவர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக இலங்கையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 56 மீனவர்களுக்கு ஜனவரி 21 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் உள்ள நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனவரி 21 ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட் டம் மேற்கொள்ளுவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கச்சி மடம் மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் களின் குடும்பத்தினர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவுள்ளது. இதே போன்று வெள்ளிக் கிழமை 56 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பைக்கில் சென்றவர் ஊரணிக்குள் விழுந்து பலி

சிவகாசி, ஜன.19- சிவகாசி, இந்திரா நகரைச் சேர்ந்த வர் ராமையா மகன் அன்புச்செழியன் (52). இவர் இரு சக்கர வாகனத்தில் ஆலங்குளம் அருகே உள்ள வலைய பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். தனி யார் கல்லூரி அருகே சென்ற போது, நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ஊரணிக்குள் விழுந்து உயிரிழந்து விட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்புச் செழியன் மகன் தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர்.

கஞ்சா வைத்திருந்த  வாலிபர் கைது

தேனி, ஜன.19- கம்பத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் கைது செய்து, அவரிடமி ருந்து 2.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா, தலை மைக் காவலர் ராஜா உள்ளிட்ட காவ லர்கள் கம்பம் வாரச்சந்தை அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒரு வரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் இரண்டு கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் இவர் கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்த பாண்டிய ராஜன் மகன் ஜெயக்குமார் (22) என்பது தெரிய வந்தது. இவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்  மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

போலீஸ் வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை

விருதுநகர், ஜன.19- விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் பூஜா (21). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், பல்வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார். அதன்படி காவலர் தகுதி  தேர்வையும் பூஜா எழுதினார். இதன் முடிவுகள் வெளியானது. இதில் கட் ஆப் மார்க் குறைந்து விட்டதாக பூஜா கவலை யில் இருந்தார்.  இந்த நிலையில் அவருடன் தேர்வு எழுதிய பலரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதனை கேட்ட பூஜா மேலும் வேதனை அடைந்தார். இதனால் விரக்தி யடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ரயிலில் அடிபட்டு  மில் தொழிலாளி பலி

இராஜபாளையம், ஜன.19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் முருகன் (48). மில் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவ ருக்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது.  இந்நிலையில், இரவு ஷிப்ட் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து ஆடுகளுக்கு கீரை ஒடிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றார். அப்போது ரயில்வே தண்ட வாளத்தை கடந்து செல்லும் போது, சென்னையில் இருந்து செங்கோட் டைக்கு செல்லும் பொதிகை ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது 

திருவில்லிபுத்தூர், ஜன.19-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் நவீன் குமார் (25). இவர் கோயம்புத்தூரில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. நவீன்குமாருக்கும் அவ ரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு வரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்த நிலையில் நவீன்குமார் 15 வயது கொண்ட ஒரு சிறுமியை அடிக்கடி திருமணம் செய்வதாக கூறி ஆசைவார்த்தை காட்டி மானபங்கம் செய்துள் ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவர் தாயிடம் இது குறித்து கூறியுள்ளார்.  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருவில்லி புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவீன்குமார் மீது புகார் செய்தார் அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறு மிக்கு பாலியல் தொல்லை தந்த நவீன் குமாரை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு: 3  பேர் கைது

விருதுநகர், ஜன.19- விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு வட்டத்திற்குட்பட்ட  வ.புதுப்பட்டி யில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.  அர்ச்சனாபுரம் பெரியஓடை அருகே சென்றபோது எதிரே 3 பேர் வந்தனர். அப்போது, மூவரும், வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத் துறையினர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த னர். இதையடுத்து, வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் பாலாஜி தலை மையிலான காவல்துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைகளை கைப்பற்றினர். பின்பு, அதைப் பிரித்து பார்த்தனர். அதில், கலர் கலராக 9 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை சோதனையிட்ட னர். பின்னர், அதை பாதுகாப்பாக, ஓடைப் பகுதியில் பெரிய பள்ளம் தோண்டி புதைத்தனர்.   இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தப்பி ஓடிய வ.புதுப் பட்டியைச் சேர்ந்த புஷ்பராஜ் (23), சின்ன மணி (20), சரத்குமார் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடந்த 2021 நவம்பர் மாதம் கிறிஸ்டியான பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஒரு தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பழி வாங்கவே, நாட்டு வெடிகுண்டுகள் தயா ரிக்கப்பட்டதாக காவல்துறையின்  முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.