districts

img

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான ஆளுநரை திரும்பப்பெறுக

சேலம், டிச.19- ஆன்லைன் ரம்மியால் தற்கொலை அதி கரித்து வருகிற நிலையில், இந்த விளை யாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் தமிழக ஆளுநர் ரவி செயல்படுவதா குற்றம்சாட்டி, சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.  தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆன்லைன்  சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற் கொலை செய்து வருகின்றனர். பல்வேறு அர சியல் கட்சிகள் ஆன்லைன் ரம்மி குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலை யில், தமிழக அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.  இந்நிலை யில், தமிழக ஆளுநர் ரவி இத்தீர்மானத் திற்கு ஒப்புதல் தராமல், ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் சூதாடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது. மேலும், தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு  ஆதரவாக பேசி வருவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முதல் தலைமை தபால் நிலையம் வரை கழுத்தில் தூக்கு கயிற்றை மாற்றிக் கொண்டு ஊர்வலமாய் வந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை குடிய ரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் என  குடியரசு தலைவருக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராடிய தால் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பெரியசாமி முக்கிய நிர்வாகிகள் பிரபாகரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.