districts

img

உதவித் தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,டிச.2 தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஓன்றியத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 2000 ஆக  உயர்த்தி  டிசம்பர்3 உலக மாற்றுதிற னாளிகள் தினத்தன்று வழங்கக் கோரியும் மாற்றுத்திறனாளி குடும்பங் களை வறுமைக்கோடு பட்டிய லில் இணைக்க கோரி யும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி துறை மூலம்  உதவித்தொகை வழங்கக் கோரியும் கடந்த ஏழு வருடங்களாக மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் வழங்காததை கண்டித் தும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கால்வாய் மணி மந்திரம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்  ஜெபஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒன்றிய செயலாளர்  கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு புவானி சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம் ,தெற்கு காசரி கால்வாய்,செய்துங்கநல்லூர், நாணல் காடு பகுதியில் இருந்து மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டனர்.

;