districts

img

மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்ட சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை, ஜூன் 16- மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்க ளில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உடன டியாக தீர்க்கக்கூடிய பிரச்சனை களை தீர்த்து வைத்தார்.  மேலும் பல நாட்களாக பல ஆண்டுகளாக பட்டா கிடைக்கா மல் இருந்தவர்களுக்கு உடனடியா கவும் ஓரிரு நாட்களில் பட்டா வழங்க அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாகவும் பட்டா வழங்கப் பட்டது. இரணியம் ஊராட்சியில் பட்டா கேட்டும் விரிவாக்க பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர். அதற்கு எம்.பி. முன்னிலையில் அதி காரிகள் ஊராட்சி ஒன்றிய நிதியில் கிராம ஊராட்சி மூலம் திட்டம் தொடங் கப்பட உள்ளது விரைவில் சாலை, சாக்கடை வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் வந்துவிடும்  என்று தெரி வித்தனர். அரசு பேருந்து இரணியம் விலக் கில் நின்று செல்ல கோரிக்கை மனு அளித்தனர். அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி, பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுக்கும் படி எம்.பி.,  கேட்டுக் கொண்டார். ஆலாத்தூர் ஊராட்சியில் பல் வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும் அதிகாரிகள், மக்கள் அளித்த மனுக்களில் பல்வேறு பணி கள் நடந்து வருகிறது. மாராணி யேந்தல் பகுதிக்கு பேருந்து வருகிறது. காலை 7.30 மணிக்கு வர கூடிய பேருந்தை 8 மணிக்கும் மாலையில் ஒரு நேரம் வர ஏற்பாடு செய்ய வேண் டும் என கோரிக்கை வைத்தனர். உட னடியாக அரசு போக்குவரத்து அதி காரிகளை அழைத்து உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.பி., கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் பேருந்து நேரத்தினை மாற்றி முறையாக நாளை முதல் வர ஏற்பாடு செய்யப் படும் என்று கூறினர்.  

விரிவாக்க பகுதிகளான விசா லாட்சி நகர் உட்பட பல்வேறு பகுதி களுக்கு சாலை வசதி, கழிவு நீர் வசதி மின் விளக்கு வசதி ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் பணிகள் நடக்க உள்ளன. விரைவில் உங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும் என்று கூறினர்.  செட்டிகுளம் ஊராட்சி  வெளிச்ச நத்தம் கிராமத்தை சேர்ந்த  நம்பாத் தாள் 45 வருடமாக குடியிருக்கும் வீட்டிற்கும் அதேபோல் பெரியபட்டி கிராமத்தை சிலம்பரசன் என்பவர் 35 ஆண்டுகாலமாக குடியிருந்து வரும் வீட்டிற்கு  பட்டா கேட்டு செவ்வா யன்று  நடைபெற்ற முகாமில் மனு அளித்தனர். இவர்கள் இருவருக்கு உடனடியாக மனு அளித்த மறு நாளே  புதனன்று செட்டிகுளம் ஊரா ட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்  சு.வெங்கடேசன் எம்.பி.,பட்டா வழங்கினார். தொடர்ந்து செட்டிகுளம் ஊராட்சி மக்களிடம் 100 நாள் வேலை குறித்து கேட்டறிந்தார்.  வீரபாண்டி ஊராட்சியில் பல் வேறு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக உடன் வந்திருந்த அதிகாரி கள் தெரிவித்தனர். பின்னர் பட்டா கேட்டு மனு அளித்தவர்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதாக தெரிவித்தனர்.

பகுதி நேர ரேசன் கடை 

குலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காயம்பட்டி எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள்,  குலமங்க லம் கூட்டுறவு சொசையிட்டியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் வாங்க மிகவும் சிரமமாக உள்ளது என தெரிவித்தனர்.  இது குறித்து  கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் காயம்பட்டி, எழும்பூர் பகுதிகளுக்கு பகுதி நேர ரேசன் கடை உடனடியாக செயல் பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண் டார். அதற்கு அதிகாரிகள், அடுத்த வாரத்தில் இருந்து பகுதி நேர ரேசன் கடை செயல் பட ஏற்பாடு செய்வோம். புதிய ரேசன்கடை கட்ட இடம் இருந் தால் கட்டிவிடலாம் என்று கூறினர்.  அங்கன்வாடி கட்டிடம்  தற்போது வேறு கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன் வாடி மையத் திற்கு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து பெருமாள் கோவில் பகுதி யில்  கட்டிடம் கட்டித்தர உள்ளதாக எம்,பி முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். பூதகுடி ஊராட்சியில் சாக்கடை வசதி, தெருக்களில் பேவர் பிளாக் கல் சாலை உள்ளிட்ட வசதிகள் கேட்டு மனு  அளித்தனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப் பட்டன. தொடர்ந்து அதிகாரிகளிடம் இது குறித்து விவாதித்து ஊராட்சி ஒன்றிய பொது நிதி எம்.ஜி.என்.ஆர் எஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் மூலம் அடிப்படை வசதிகள் நிறை வேற்றித் தருவதாக அதிகாரிகள் எம்.பி முன்னிலையில் உறுதிய ளித்தனர். 

சின்டெக்ஸ் தொட்டி திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  பேச்சிகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பனங்காடியில் (மேல பனங் காடி)  ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்ட போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் தொட்டியினை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.   வாகைக்குளம் ஊராட்சி உட்பட அனைத்து ஊராட்சிகளிலும்  ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக் கப்பட்டன. உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளை உடனடியாக எம்.பி. தீர்த்து வைத்தார். மேலும் ஊராட்சி ஒன்றிய நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி உள்ளிட்ட நிதிகள் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன.

பள்ளிக்கு புதிய கட்டிடம்: பணி துவக்கி வைப்பு  

கோவில்பாப்பாக்குடியில் பலவேறு மனுக்கள் பெறப்பட்டன. ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு பேவர் பிளாக் கல் பதிக்க ரூ.5.லட்சம் மதிப் பீட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதாக எம்.பி.கூறினார்.  சிக்கந்தர் சாவடியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 10லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணி யினை சு,வெங்கடேசன் எம்.பி. துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமலை,  மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனபாய் , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) உலகநாதன், மற்றும் அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள், செயலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, எஸ்.கே.பொன்னுத்தாய், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.