திருவில்லிபுத்தூர், மே 2- தொழிலாளர் தினத்தை முன் னிட்டு திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிளான கோட்டைபட்டி, விழுப்பனூர். பூவாணி, பிள்ளையார் நத்தம், திருவண்ணா மலை உள்ளிட்ட பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன கோட்டைப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் ,வார்டு உறுப்பி னர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் விழுப்பனூரில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். ஆணையாளர் சிவக்குமார், பற்றாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருவண்ணா மலையில் ஊராட்சி மன்ற தலைவர் மீனா தலைமை வகித்தார். பற்றாளர் ராமசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துமாரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கண்ணன், பரமசிவம், ஊராட்சி செயலர் முனி யாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . பூவாணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பற்றாளர் தங்க முனி யாண்டி மற்றும் அரசுத்துறை அலு வலர்கள். பணித்தள பொறுப்பா ளர்கள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலை வர் காசி தலைமை வகித்தார். ஆணை யாளர் சிவக்குமார், பற்றாளர் மணி மாறன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜன், அரசுத்துறை அலுவலர்கள் ,ஊராட்சி செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் அரசின் நலத் திட்டங்கள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செல்வத்துள் ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சி பகுதிகளி லும் கிராம சபை கூட்டங்கள் நடை பெற்றன.