districts

மதுரை முக்கிய செய்திகள்

மாணவர்களுடன் கலந்துரையாடிய காவல் கண்காணிப்பாளர்

நாகர்கோவில், பிப்.11- கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெ.தி.இந்துக் கல்லூரி மாணவர்க ளுடன்  சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரை யாடினார். நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சிதம்பர தாணு தலைமை வகித்தார். சமூகவியல் துறைத் தலைவர் சுரேந்திரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பேசுகை யில், “  பொது மக்கள் கோரிக்கைகளுடன் சாலைக்கு வரும் போது அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதோடு அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு காண  காவல்துறை வழிவகுக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண 24 மணி நேரமும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. பேருந்துகளில் பயணிக்கும்போது பெண்களுக்கு தொல்லை ஏற்பட்டால் காவல்துறையின் உதவியை எப்படி நாடுவது?  மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுப்பது எப்படி? என மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார் காவல் கண்காணிப்பாளர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,235 வழக்குகள் விசாரணை

திருநெல்வேலி பிப் 11- மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தர வின் பேரில் 2023-ஆம் ஆண்டுக்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருநெல்வேலி உள்பட ஒன்பது தாலுகாக்களில் நடத்தப்பட்டது.  பாளையங்கோட்டையிலுள்ள  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு  தலைவருமான குமரகுரு  துவக்கி வைத்தார். இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமை யியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உட்பட மொத்தம் 4, 235 வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்கள் மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட இரண்டாயிரம் வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

7.10 லட்சம் பேருக்கு  குடற்புழு நீக்க மாத்திரை  திருநெல்வேலி ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி, பிப். 11- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு பிப். 14-ஆம்  திருநெல் வேலி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 49 ஆயிரத்து 813 சிறார்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 844  மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படு கிறது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.21-ஆம் தேதி  குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப் படும். குடற்புழு மாத்திரை உட்கொள்வதால் குழந்தைக ளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சி மேம்படும்” கூறப்பட்டுள்ளது. 

வாட்ஸ்-அப்’பில் லிங்க் அனுப்பி ரூ.2.40 லட்சம் மோசடி

திருநெல்வேலி, பிப்.11- தென்காசி கோகுலம் காலனியைச் சேர்ந்தவர் செல்வ ரெங்கராஜ்(39). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவரது  செல்போன் வாட்ஸ்-அப்புக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அந்தக் குறுந்தகவலில் உள்ள லிங்கை செல்வ ரெங்கராஜ் கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது போனை தொடர்புகொண்டு எதிர்புறம் பேசிய நபர் செல்போனில் வந்த கடவுச்சொல்லை கேட்டுள்ளார். உடனே செல்வ ரெங்கராஜூம் அந்தக் கடவுச்சொல்லை தெரிவித்துள்ளார். உடனே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து நான்கு தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செல்வரெங்கராஜ் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வருகிறது.

திசையன்விளை அருகே வாலிபர் கொலை

திருநெல்வேலி, பிப்.12- திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்ற மணி(26).  மீன்பிடித் தொழிலா ளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் டெல்வர் மகன் ராஜா(28). மீனவர். இவர்கள் இரண்டு பேரும்  அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது குடிப்பது வழக்கமாம். வெள்ளிகிழமை இவர்கள் இருவரும் சுபாஷ் வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகு தியில் அமர்ந்து மதுக் குடித்து கொண்டிருந்தனர். அப் போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதில், சுபாஷ்  ராஜாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜா தனது வீட்டுக்குச் சென்று உறவினர்க ளுடன் சேர்ந்து அரிவாளுடன் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த சுபாசை ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த உவரி காவல்துறையினர் சுபாஷ் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருநெல்வேலி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிறப்புப் பேரவை

நாகர்கோவில், பிப்.11- தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நாகர்கோ வில் கிளை சிறப்புப் பேரவை  அரசு ஊழியர் சங்க அலுவல கத்தில் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பேரவையை ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பின்  மாவட்டத் தலைவர் ஐய்வின், நிர்வாகி கள் பொன்.சோபனராஜ், சின்னன் பிள்ளை, கலா,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செய லாளர் சுந்தர்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில பொதுச் செயலாளர் கர்சன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். வின்சென்ட் நன்றி கூறினார்.  இந்தப் பேரவையில் தலைவ ராக பால்ராஜ், செயலாளராக மரிய வின்சென்ட், பொருளாளராக ராஜ மார்த்தாண்டன், உதவித் தலை வர்களாக முருகன், கிருஷ்ண தாஸ், உதவிச் செயலாளர்களாக பொன்.சோபனராஜ்,  ஒய்.ஸ்டீபன் தேர்வு செய்யப்பட்டனர்.  ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய 87 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தினத்தன்றே பணபலன்களை வழங்க வேண்டும்.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென தலைவர்கள் வலியுறுத்தினர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

திருநெல்வேலி, பிப். 11- திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், தென்னை போன்றவற்றைப் பயிரிட்டுள்ளனர்.  இந்த நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும்  யானை, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த விவசாயி வைத்திலிங்கத்துக்கு சொந்தமான தோட்டத்துக்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள், அங்கு பயிரிட்டிருந்த நெற்பயிர்களை மிதித்து தின்று சேதப்படுத்தின. மேலும் தென்னை மரத்தை சாய்த்த காட்டு யானைகள், அங்கிருந்த பிளாஸ்டிக் குழாய்களையும் சேதப்படுத்தின.  இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த கருவேல், முருகன், மாணிக்கம், இசக்கிமுத்து, ஏசுராஜன், பழனி, தவசுபாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் பயிரிடப் பட்டிருந்த நெற்பயிர்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தின.  இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், ‘’வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாத வாறு மலையடிவார பகுதியில் சோலார் மின்வேலியை முழுமையாக அமைக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு மானியம் வழங்கினால் நாங்களே சோலார் மின்வேலி அமைத்து பயிர்களை பாதுகாப்போம்’’ என்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 7 ஆண்டு சிறை

 திருவில்லிபுத்தூர்,பிப்.10- சாத்தூர் அருகே  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்  ராம ராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற தீயணைப்புத்துறை ஊழியர் ஆவார். ராமராஜ் கடந்த 24- 8- 2021 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை  அழைத்து கடைக்கு சென்று ஊறுகாய் வாங்கி வருமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.திருவில்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத்தடுப்பு அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கினை விசாரித்த நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட தீயணைப்புபடை ஓய்வு பெற்ற ஊழியர் ராம ராஜ்க்கு 7 வருடம் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.