5 நகராட்சிகளை தரம் உயர்த்தி அரசு உத்தரவு
சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் 5 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்தி வரம்-கூடுவாஞ்சேரி ஆகிய 2 ஆம் நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படு கின்றன. மேலும் பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய முதல் நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே தினத்தில் கிராம சபைக் கூட்டம்
சென்னை, ஏப்.25- மே தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர் தினமான மே 1 அன்று, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி, காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை, மத சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை, மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்
சென்னை,ஏப்.25- சேலம் மற்றும் கடலூரில் நீர் நிலையில் குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அண்மையில் சேலம் மாவட்டம், சங்ககிரி கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்க ளில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், நொய்யலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித் திருந்தது. இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் பாலாஜி, பிரசாந்த் ஆகியோர் ஏரியில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஏப்ரல் 23 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்திலுள்ள பெரிய ஏரியில் குளித்துக் கொண்டி ருந்த இன்பராஜ் (8), தினேஷ் (14) ஆகிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மாணவர்கள், சிறுவர்கள் நீர்நிலை களில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர், நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வு முடிவு தேதி திடீர் மாற்றம்
சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவு மே 5 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், மே 7 ஆம் தேதி ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதனால் தேர்வு முடிவு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 13 ஆம் தேதி துவங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாண வர்கள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் இந்த தேர்வெழுத உள்ளனர். எனவே, மே 7 ஆம் தேதி ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வு முடிவு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பசுமை மின் உற்பத்தியில் சாதனை ஐ.சி.எப் ஆலைக்கு பாராட்டு
சென்னை,ஏப்.25- சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஐ.சி.எப். தொழிற்சாலை காற்றாலை மற்றும் சோலார் தகடுகளை பெரு மளவில் நிறுவி பசுமை மின்சக்தி தயாரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஐ.சி.எப்.பில் வாய்ப்பு உள்ள இடங்களில் சோலார் மற்றும் காற்றா லைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த நிதியாண்டில், முதல் முறை யாக 22.17 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். இதனால் மின் செலவுக்கான 12.02 கோடி ரூபாய் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மின்சக்தி அமைப்பு ஐ.சி.எப்.க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பசுமை மின்சக்தி அமைப்புகள் மூலமாக இந்த கட்டடங்களுக்கு தேவையான மின்சக்தியை விட அதிகமான மின் உற்பத்தி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 41 போலி இணையதளங்கள்: தடை செய்ய முடிவு
திருமலை, ஏப்.25 - திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. மேலும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு, இ-உண்டி, நன்கொடைகள் என அனைத்து சேவைகளுக்கும் இந்த இணைய தளத்தை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், TTDevasthanams என்கிற மொபைல் செயலியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாகவும் பக்தர்கள் டிக்கெட், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், தேவஸ்தான இணைய தளத்தை போலவே பல போலி இணைய தளங்கள் இணையத்தில் உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தேவஸ்தானத்தின் ஐ.டி. பிரிவு, கண்டறிந்து திருமலை காவல்துறையினரிடம் புகார் அளித்தது. அதன்படி 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற்றின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
துபாய் புறப்பட்ட விமானத்தில் தீ
காத்மாண்டு, ஏப்.25 - நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு வில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காத்மாண்டுவிலிருந்து போயிங் 576 எனும் விமானம் நேற்றிரவு 150 பய ணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட்ட சில நிமிடங்களி லேயே விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. விமானத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கத் தயாரானது. எனினும் தீயை அணைக்க எடுக்கப்பட்ட முதற்கட்ட முயற்சியில் முழுமையாக தீ அணைக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்படாமல் துபாய் சென்றடைந்தது என தகவல் வெளியாகி யுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பறவை மோதியதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த விமான தீ விபத்தினால் யாருக்கும், எந்த காயமும் ஏற்படவில்லை என்று நேபாள விமானத் துறை விளக்கம் அளித்துள்ளது.
‘ஜனநாயக சமூகத்தில் போலீசாரே இறுதி தண்டனையை அளிப்பவராக இருக்க முடியாது
புதுதில்லி, ஏப். 25- உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி அத்தீக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப்பும் ஏப். 15 அன்று பிரயாக்ராஜ் நகரில் மூன்று பேரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமை க்கக் கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று விசார ணைக்கு வருவதாக இருந்தது. எனினும் அதற்கு ஏற்ப வழக்கு விபரம் பட்டியலிடப்படவில்லை. வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,’’இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஏற்ப 5 நீதி பதிகள் தற்போது இல்லை. நீதிபதி களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிலர் வேறு காரணங் களால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே வரும் வெள்ளியன்று (ஏப்., 28) விசாரிக்க முயல்கிறோம்’’என தெரிவித்தார். வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’கடந்த 2017- ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்தது முதல் இதுவரை 183 என்கவுண்ட்டர்கள் நடந்துள் ளன. ஜனநாயக சமூகத்தில் போலீ சாரே இறுதி தண்டனையை அளிப்ப வராக இருக்கமுடியாது. தண்டிக்கும் அதிகாரம் நீதித்துறை வசம் மட்டுமே இருக்கவேண்டும். எனவே இந்த என்கவுண்ட்டர்கள் குறித்தும், அத்தீக் மற்றும் அஷ்ரப் கொல்லப்பட்டது குறித்தும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிதலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் புறப்பட்டது ஐஎன்எஸ் சுமேதா கப்பல்
கார்தோம், ஏப்.25- உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 278 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர் பாளர் அரிந்தம் பக்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மீட்கப்பட்ட இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “ஆபரேஷன் காவிரி மூலம் மீட்க ப்பட்ட இந்தியர்கள் அடங்கிய முதல் குழு சூடான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இந்தக் குழு வானது ஐஎன்எஸ் சுமேதா கப்ப லின் மூலம் சவூதிஅரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது” என பதிவிட்டுள்ளார். சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகா ரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறைக்கு ஒரு இந்தி யர் உட்பட சுமார் 400 பேர் பலியாகி யுள்ளனர். இதனிடையே, சூடானில் சிக்கி யுள்ள சுமார் 3 ஆயிரம் இந்தி யர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு கூறி யிருந்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த ஏப்.21 அன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சூடானில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, சூடானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ ரகத்தின் 2 விமானங்களும், சூடானின் முக்கிய துறைமுகத்தில் கடற் படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், துறைமுகத்தி ற்கு 500 இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், முதல் ஐஎன் எஸ் சுமேதா கப்பலில் அனுமதிக்கப் பட்ட முதல் குழுவில் 278 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.