மதுரை, பிப். 17- மருத்துவத்துறையில் தற்கா லிக கணக்கு தலைப்பில் உள்ள ஊழியர்களுக்கு மாதந்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத் துவம் மற்றும் பொது சுகாதா ரத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்டதலை வர் ஆ.பரமசிவன் தலைமை வகித்தார். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ.ராமசந்திரன், மாநில துணைத்தலைவர் க.நீதிராஜா பேசினர். அரசு அனைத்து மருந்தா ளுநர் சங்க மாநிலச்செயலாளர் மு.ஆனந்தவள்ளி சிறப்புரை யாற்றினார். மாநிலத் தலைவர் மா.செல்வகுமார் நிறைவுரையாற்றி னார். அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்ட செயலாளர் மு.பெரோஸ்கான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.