சேலம், டிச.3- சேலத்தில் டிச.17 ஆம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதி நிதித்துவ பேரவையில் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதி நிதித்துவ பேரவை டிச.17 ஆம் தேதியன்று சேலத்தில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற உள்ளது. இப்பேரவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும், அரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அரசு ஊழியர் களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு எடுத்துக் கூறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில பிரதிநிதித்துவ பேரவையை வெற்றி கரமாக நடத்துவது குறித்தும், இதை யடுத்து நடைபெறும் பேரணியில் சீருடை யுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர் கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சனியன்ற அனைத்து அரசு துறைகளுக்கும் அழைப்பிதழ்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப் பட்டன. இதில், அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி, வரவேற்புக்குழு தலை வர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண் டனர்.